அறையை விட்டு வெளியேறுகிறபோது ஜன்னல்கள் தெருவில் அலைந்திருக்க மேசையில் எனது முகம் தனித்துக் கிடக்கிறது

Friday, July 25, 2008

பயங்கர கொலையாளி

--------------------------தீபச்செல்வன்

``````````````````````````````````````````````
எத்தனை முறைதான்
என்னை
கொலை செய்து போடுவாய்
நீ
ஒரு பயங்கரமான
கொலையாளி என்பதை
நான் மட்டுமே
அறிவேன்
உன்
கத்திகளால்
என்னை வெட்டி
சிதைத்து விட்டிருப்பதை
நான்
வெளியில் சொல்லாமலிருக்கிறேன்
குருதியில்
மிதக்கின்றன
மிகுந்த
பிரியத்துடனிருந்த
நமது சொற்கள்.
-----------------------------------------

No comments: