அறையை விட்டு வெளியேறுகிறபோது ஜன்னல்கள் தெருவில் அலைந்திருக்க மேசையில் எனது முகம் தனித்துக் கிடக்கிறது

Friday, July 25, 2008

கத்தி

--------------------------தீபச்செல்வன்

````````````````````````````````````````````````````
சிரிப்பின் தொடக்கத்திலேயே
நான்
அழத்தொடங்குகிறேன்
இந்த மகிழ்ச்சியின்
மிகவும் சிறிய
துளி
நளை பெரும்
துக்க அலைகளாய்
வரப்போகின்றன
நீ
புரிந்து கொண்டவைகளுக்குமாக
விட்டுக் கொடுத்தவைகளுக்குமாக
நாளை
குழப்பப்போகிறாய்
முரண்படப்போகிறாய்
உனது
முகத்தின் சிரிப்பு
வார்த்தைகள்
நாளை கத்தியாகப்போகின்றன
இப்போதைக்கு
உனது முகத்தை
காணாமலிருக்கிறேன்
எனது கனவில்
கற்கள்
வந்து விழுகின்றன
ஒரு புழுவாய்
உனது
சூட்டு வார்த்தைகளால்
நான் துடித்துப்போகிறேன்
நாம் என்றிருந்து
யாருக்காகவும்
இருட்டு முகங்களை
அணிந்தபடி
பேச வேண்டியிருக்கிறது
நாம் பேசுகிறோம்
வழமையான
நீயும் நானுமாக
கத்திகளாய் கத்திகளுக்குள்.
--------------------------------------------------

No comments: