அறையை விட்டு வெளியேறுகிறபோது ஜன்னல்கள் தெருவில் அலைந்திருக்க மேசையில் எனது முகம் தனித்துக் கிடக்கிறது

Friday, July 25, 2008

பிழைத்த கோடுகள்

-------------------------தீபச்செல்வன்

`````````````````````````````````````````````````
நான் ஏதோ
கிறுக்கியிருக்கிறேன்
இந்த கோடுகளிலிருந்து
அர்த்தம்
வெளியேறிவிட்டது
அழகிய ஓவியம்
என்பது
பிழையான கருத்தாய்
கீழே கிடக்கிறது
தேனீர்க்கோப்பைகள்
கண்களுக்கு
தெரியாத மாதிரியாய்
வெடித்தே இருந்தன
நமது
பின்னேரம் கசிந்து
வீணாகுவதை
இப்பொழுதுதான்
நான்
உணருகிறேன்
காய்ந்த
தேனீர்க் கறைக்குள்
எறும்புகளோடு அலைகின்றன
கோடுகள்
பிழைத்து விட்ட
உனதும் எனதுமான சொற்கள்.
-------------------------------------

No comments: